நுகர்வு அதிகரிக்கும் நுகர்வு அதிகரிக்கும் ...  ஜனவரியில்  ஜி.எஸ்.டி., ரூ.1.02 லட்சம் கோடி ஜனவரியில் ஜி.எஸ்.டி., ரூ.1.02 லட்சம் கோடி ...
கடன் பாக்கிக்காக சொத்துக்களை விற்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
13:48

புதுடில்லி : கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதற்காக நிறுவன சொத்துக்களை விற்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளரான அனில் அம்பானி, கடன் பிரச்னையில் தவித்து வருகிறார். ஜியோ அறிமுகத்தால் இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேனுஜ்ஸ் நிறுவனம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.46,000 கோடிக்கு மேல் கடன் ஏற்பட்டது. கடனை திருப்பிச் செலுத்தாததால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம், தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது.

மேலும் அனில் அம்பானியை கைது செய்து தங்களுக்கு சேர வேண்டிய ரூ.550 கோடியை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவன சொத்துக்களை விற்று, கடன் தொகையை திருப்பிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, சொத்துக்களை விற்க 2017 ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் அவற்றை விற்க முடியவில்லை. இதனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இது குறித்து கம்பெனி இயக்குனர்கள் குழு ஆலோசனை நடத்தியது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க, மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்கு சுமார் 40 பேரிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.975 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஜியோ நிறுவனத்திடம் விற்று, ரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ..550 கோடியில் ரூ.230 கோடியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)