பதிவு செய்த நாள்
02 பிப்2019
13:48
புதுடில்லி : கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதற்காக நிறுவன சொத்துக்களை விற்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளரான அனில் அம்பானி, கடன் பிரச்னையில் தவித்து வருகிறார். ஜியோ அறிமுகத்தால் இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேனுஜ்ஸ் நிறுவனம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.46,000 கோடிக்கு மேல் கடன் ஏற்பட்டது. கடனை திருப்பிச் செலுத்தாததால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம், தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது.
மேலும் அனில் அம்பானியை கைது செய்து தங்களுக்கு சேர வேண்டிய ரூ.550 கோடியை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவன சொத்துக்களை விற்று, கடன் தொகையை திருப்பிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, சொத்துக்களை விற்க 2017 ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் அவற்றை விற்க முடியவில்லை. இதனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இது குறித்து கம்பெனி இயக்குனர்கள் குழு ஆலோசனை நடத்தியது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க, மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.25,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்கு சுமார் 40 பேரிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.975 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஜியோ நிறுவனத்திடம் விற்று, ரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ..550 கோடியில் ரூ.230 கோடியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|