ஜனவரியில்  ஜி.எஸ்.டி., ரூ.1.02 லட்சம் கோடி ஜனவரியில் ஜி.எஸ்.டி., ரூ.1.02 லட்சம் கோடி ...  முட்டை விலை  425காசுகளாக நிர்ணயம் முட்டை விலை 425காசுகளாக நிர்ணயம் ...
வர்த்தகம் » ஜவுளி
பிரிட்டனின் வர்த்தக கொள்கைபின்னலாடை ஏற்றுமதியாளர் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
23:28

திருப்பூர்:ஐரோப்பாவிலிருந்து பிரியும் போது, பிரிட்டன், எத்தகைய வர்த்தக கொள்கையை பின்பற்றும் என கணிக்க முடியாததால், திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


ஐரோப்பாவிலிருந்து, பிரிட்டன் வெளியேறுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது ஓட்டெடுப்பில், பிரிட்டன் வெளியேற வேண்டும் என, எம்.பி.,க்களும் ஓட்டளித்து உள்ளனர். ஆனால், ஐரோப்பாவுடன் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். பிரிவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால்,


ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் புதிய குழப்பம் உருவாகியுள்ளது.இதனால், அந்த நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என, திருப்பூர் தொழில் துறையினர் கவலை அடைந்துஉள்ளனர்.


இது குறித்து, திருப்பூரில் தொழில் துறையினருக்கு ஆலோசகராக இருக்கும், கிரீஷ் கூறியதாவது:பிரிட்டனில், தற்போது குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. மார்ச், 29ம் தேதிக்குள், பிரிட்டன் வெளியேறுவது உறுதி. குறுகிய காலத்துக்குள், பிரிட்டன் எத்தகைய வர்த்தக கொள்கையை வகுக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.நம் நாட்டு ஆடைகளுக்கு, பிரிட்டனில் நல்ல வரவேற்பு உள்ளது. திருப்பூரில், ஏராளமான நிறுவனங்கள், பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதி செய்கின்றன.


ஐரோப்பாவிலிருந்து வெளியேறும் பிரிட்டன், தற்போதைய வரி விகிதங்களையே செயல் படுத்தினால், நம் ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் உருவாகும்.ஒருவேளை வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், பிரிட்டன் நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியிலும் போட்டி அதிகரிக்கும்; அந்நாட்டுக்கான வர்த்தகம் பாதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)