பதிவு செய்த நாள்
02 பிப்2019
23:28
திருப்பூர்:ஐரோப்பாவிலிருந்து பிரியும் போது, பிரிட்டன், எத்தகைய வர்த்தக கொள்கையை பின்பற்றும் என கணிக்க முடியாததால், திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஐரோப்பாவிலிருந்து, பிரிட்டன் வெளியேறுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது ஓட்டெடுப்பில், பிரிட்டன் வெளியேற வேண்டும் என, எம்.பி.,க்களும் ஓட்டளித்து உள்ளனர். ஆனால், ஐரோப்பாவுடன் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். பிரிவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால்,
ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் புதிய குழப்பம் உருவாகியுள்ளது.இதனால், அந்த நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என, திருப்பூர் தொழில் துறையினர் கவலை அடைந்துஉள்ளனர்.
இது குறித்து, திருப்பூரில் தொழில் துறையினருக்கு ஆலோசகராக இருக்கும், கிரீஷ் கூறியதாவது:பிரிட்டனில், தற்போது குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. மார்ச், 29ம் தேதிக்குள், பிரிட்டன் வெளியேறுவது உறுதி. குறுகிய காலத்துக்குள், பிரிட்டன் எத்தகைய வர்த்தக கொள்கையை வகுக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.நம் நாட்டு ஆடைகளுக்கு, பிரிட்டனில் நல்ல வரவேற்பு உள்ளது. திருப்பூரில், ஏராளமான நிறுவனங்கள், பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதி செய்கின்றன.
ஐரோப்பாவிலிருந்து வெளியேறும் பிரிட்டன், தற்போதைய வரி விகிதங்களையே செயல் படுத்தினால், நம் ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் உருவாகும்.ஒருவேளை வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், பிரிட்டன் நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியிலும் போட்டி அதிகரிக்கும்; அந்நாட்டுக்கான வர்த்தகம் பாதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|