பதிவு செய்த நாள்
04 பிப்2019
00:17
பி.பி.எப்., என குறிப்பிடப்படும், பொது சேமநல நிதியை பொருத்தவரை, ஒருவர் தன் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே கொண்டிருக்கலாம், என்பதால், தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை வைத்திருந்தால், அதை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.
நீண்ட கால பலன், வரிச்சலுகை, முதிர்வின் போது வரி விலக்கு ஆகிய அம்சங்களை கொண்டதால் சிறு முதலீட்டாளர்கள் பரவலாக நாடப்படும், திட்டமாக, பி.பி.எப்., உள்ளது.பி.பி.எப்., கணக்கை அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில், தனிநபர்கள் தங்கள் பெயரில் துவக்கலாம். கூட்டு கணக்கை துவக்க முடியாது. ஒருவர் தன் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே துவக்க முடியும்.
மைனர் குழந்தை பெயரில் கணக்கு துவக்கலாம் என்றாலும், ஒருவர் தன் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை வைத்திருக்க அனுமதி இல்லை.கணக்கு துவக்கும் போது, விண்ணப்பிப்பவர் தன் பெயரில் வேறு கணக்கு இல்லை என, உறுதி அளிக்க வேண்டும். எனினும், பல்வேறு காரணங்களினால் ஒருவர் தன் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட, பி.பி.எப்., கணக்கு கொண்டிருந்தால், அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட, பி.பி.எப்., கணக்கு இருக்கும் போது, இரண்டாவது கணக்கு, முறைப்படுத்தப்படாத கணக்காக கருதப்பட்டு, அதில் செலுத்தப்பட்ட தொகைக்கு வட்டி அளிக்கப்படாது. பி.பி.எப்., கணக்கு முதிர்ச்சி வரை இருக்க வேண்டும் என்பதால், இரண்டாவது கணக்கை மூட முடியாது. அதை முதல் கணக்குடன் இணைக்க வேண்டும்.
இதற்காக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறைக்கு எழுத்து வடிவில் கோரிக்கை அளிக்க வேண்டும். இதன் பிறகு, இரண்டு கணக்குகளும் இணைக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|