பதிவு செய்த நாள்
04 பிப்2019
11:53
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 109.53 புள்ளிகள் சரிந்து 36,359.90-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 31.75 புள்ளிகள் சரிந்து 10,861.90-ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோமொபைல், உலோகம் தொடர்பான பங்குகள் அதிக சரிவுடன் வர்த்தகமாகின்றன.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 48 காசுகள் சரிந்து ரூ.71.73ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|