பதிவு செய்த நாள்
06 பிப்2019
23:27
புதுடில்லி:அன்றாட பங்கு வர்த்தகத்தில் திடீர் ஏற்ற, இறக்கத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு, பங்குச் சந்தைகளுக்கு, ‘செபி’ உத்தரவிட்டுஉள்ளது.
சமீபகாலமாக,
‘ஜெட் ஏர்வேஸ், ஜீ எண்டெர்டெய்ன்மென்ட், ஐ.எல் அண்டு எப்.எஸ்.,
பைனான்ஸ் கார்ப்பரேஷன், சன் பார்மா’ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு
விலை, அசாதாரணமான ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகின்றன.இதற்கு, நிதி நெருக்கடி, ஊழல், விதிமீறல், நிறுவனர்களின் கொள்கை, நிர்வாக சீர்கேடு போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.
எனினும்,
பல நிறுவனங்களின் பங்குகள், எவ்வித காரணமும் இன்றி, திடீரென அதிக
ஏற்றத்தையும், பெரும் சரிவையும் சந்திக்கின்றன.
அன்றாட பங்கு
வர்த்தகத்தை, உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரங்கள் தான்
தீர்மானிக்கின்றன. நிறுவனங்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகள்,
அவற்றின் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி, பங்கு வர்த்தகத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
பங்குச்
சந்தை விதிகளை மீறும் நிறுவனங்கள், உள்குத்து மூலம் செயற்கையாக
பங்கு விலையை உயர்த்தும் நிறுவனங்கள் போன்றவற்றை கண்டு பிடித்து,
அவற்றுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது.
கடிதம்
இந்நிலையில்,
அன்றாட பங்கு வர்த்தகம் தொடர்பான கண்காணிப்பை மேலும்
தீவிரப்படுத்துமாறு, செபி, பங்குச் சந்தைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், அவற்றின் கீழ் உள்ள பங்குத் தரகு நிறுவனங்களுக்கு, தனித்தனியாக கடிதம் அனுப்பிஉள்ளன.அதில்,
வாடிக்கையாளர்களின் அன்றாட பங்கு வர்த்தக நடவடிக்கைகளை
தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பங்குகள்
விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறதா; பங்கு விலை, அளவிற்கு
அதிகமான இறக்கத்தையோ அல்லது ஏற்றத்தையே சந்திக்கிறதா என்பது
குறித்து தெரிவிக்குமாறு, பங்குச் சந்தைகள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளன.அன்றாட பங்கு வர்த்தகத்தில், பங்குகள் வேண்டி, ‘ஆர்டர்’ கொடுப்பதிலும், அவற்றின் வர்த்தகத்திலும் ஏதேனும் சந்தேகம்
ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக தகவலை பரிமாற வேண்டும் எனவும்
பங்குச் சந்தைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
இது குறித்து, பங்குச் சந்தை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சமீபகாலமாக,
ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை அதிக ஏற்றத்தையும்,
சரிவையும் சந்தித்தன. இது குறித்த சந்தேகத்தின் பேரில், அன்றாட
பங்கு வர்த்தகத்தின் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு, பங்குச்
சந்தைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|