பதிவு செய்த நாள்
07 பிப்2019
12:49
மும்பை : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்தொகைக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் 6வது நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவீதமாக குறைந்ததன் காரணமாக நிதிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, ரெப்போ வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வட்டிவிகித குறைப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், 2019-20 நிதியாண்டில் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும். 2019-20 ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.2 லிருந்து 3.4 சதவீதமாக இருக்கும். காலாண்டு பணவீக்கம் 3.9 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கொள்ளை நடவடிக்கை காரணமாக பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக ஏற்றுமதி சந்தையில் தேவை குறைந்ததன் காரணமாக 2018 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏறக்குறைய குறைந்துள்ளது. இலவச வேளாண் கடன் அளவை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.6 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்வு மற்றும் வேளாண் உற்பத்தி உயர்வு காரணமாக இந்த கடன் தொகை ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒன்றைய ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|