தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ... வரத்து சரிவால் சுக்கு விலை உயர்வு வரத்து சரிவால் சுக்கு விலை உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்போ வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
12:49

மும்பை : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்தொகைக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் 6வது நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவீதமாக குறைந்ததன் காரணமாக நிதிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, ரெப்போ வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

வட்டிவிகித குறைப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், 2019-20 நிதியாண்டில் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும். 2019-20 ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.2 லிருந்து 3.4 சதவீதமாக இருக்கும். காலாண்டு பணவீக்கம் 3.9 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கொள்ளை நடவடிக்கை காரணமாக பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக ஏற்றுமதி சந்தையில் தேவை குறைந்ததன் காரணமாக 2018 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏறக்குறைய குறைந்துள்ளது. இலவச வேளாண் கடன் அளவை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.6 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்வு மற்றும் வேளாண் உற்பத்தி உயர்வு காரணமாக இந்த கடன் தொகை ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒன்றைய ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)