பதிவு செய்த நாள்
07 பிப்2019
23:47
திண்டுக்கல்:கொடைக்கானல்
முட்டைக்கோஸ்’ விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் அதை பறிக்காமல்
செடிகளில் விட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை
கிராமங்களான மன்னவனுார், கவுஞ்சி, பூண்டி, கூக்கால் மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் பூண்டு, கேரட், பீட்ரூட், உருளை, முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற
காய்கறிகள் சாகுபடியாகின்றன.தற்போது முட்டைக்கோஸ் விளைச்சல் நன்கு
இருந்தாலும், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அடிமாட்டு விலைக்கு
கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதனால், பலரும்
முட்டைகோஸை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டுள்ளனர்.
இது குறித்து
விவசாயிகள் கூறியதாவது:வத்தலக்குண்டு, மதுரை மார்க்கெட்களில், 70 கிலோ
மூட்டை முட்டைகோஸ் ரூ.300க்கு தான் விற்பனையாகிறது. ஆனால், பொதுமக்கள், 1
கிலோவை, 20 ரூபாய் கொடுத்து தான் வாங்குகின்றனர். விளைவித்த பலன் கூட
இல்லை. வண்டி வாடகை, ஏற்றி, இறக்குதல் கூலிக்கு கூட விலை இல்லாததால்,
முட்டைக்கோஸை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|