பதிவு செய்த நாள்
07 பிப்2019
23:59
மும்பை:வங்கிகள், அதிக அளவில், மிகப் பெரும் தொகையை டெபாசிட்டாக திரட்ட வசதியாக, அத்தொகைக்கான வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
வங்கிகள், ‘பல்க் டெபாசிட்’ பிரிவின் கீழ், ஒரு தவணையில் பெருந்தொகையை, குறித்த கால வைப்பு நிதியாக பெறுகின்றன.இவ்வகை, டெபாசிட்களுக்கு, அதே முதிர்வு காலத்தைக் கொண்ட, பிறவகை வைப்பு நிதி திட்டங்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.இத்தகைய, ஒரு தவணையில் செலுத்தப்படும் பெருந்தொகை டெபாசிட்களுக்கான வரம்பு, தற்போது, 1 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த வரம்பு, 2 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதன் மூலம், வங்கிகள் சுதந்திரமாக, ஒரு தவணையில் பெருந்தொகையை திரட்டி, அவற்றின் நிதியாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், பெருந்தொகை டெபாசிட் மற்றும் அவற்றுக்கான வட்டி குறித்த விபரங்களை மேற்பார்வையிட வசதியாக, ‘கோர் பேங்கிங்’ எனப்படும் ஒருங்கிணைந்த வங்கிச் செயல் பாடுகளில் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்திஉள்ளது.இத்துடன், நகர்ப்புற வங்கிகளின் மேம்பாட்டிற்காக, அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|