பதிவு செய்த நாள்
08 பிப்2019
23:45
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ குழுமம், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 26 ஆயிரத்து, 992 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
இக்குழுமத்தின் மொத்த வருவாய், நடப்பு, 2018 –- 19ம் நிதியாண்டின், அக்., – டிசம்பர் காலாண்டில், 4.4 சதவீதம் உயர்ந்து, 77 ஆயிரத்து, 583 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 73 ஆயிரத்து, 338 கோடி ரூபாயாக இருந்தது. பிரிட்டனின், ‘ஜகுவார் லேண்டுரோவர்’ பிரிவிற்கு, 310 கோடி பவுண்டு, ரொக்கமற்ற வகையில் கணக்கு சரி செய்யப்பட்டதால், 26 ஆயிரத்து, 992 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவில், ஜகுவார் கார் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதால், இழப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதால், கார் வினியோகம், விற்பனை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில், ஜகுவார் லேண்டுரோவர் பிரிவு உள்ளது.சுற்றுச்சூழல் மாசு விதிமுறைகள், கலப்பு எரிபொருள் வாகனங்கள், மின் வாகனங்கள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதும், ஜகுவார் விற்பனை சரிய காரணம்.
அதேசமயம், வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில், விற்பனை உயர்ந்துள்ளது.டாடா மோட்டார்ஸ் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியானதை அடுத்து, நேற்று அதன் பங்கு விலை கடும் சரிவை சந்தித்தது.தேசிய பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே, பங்கின் விலை, 29.45 சதவீதம் குறைந்து, 129 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
இது, 1993, பிப்., 3க்கு பின், ஒரு நாளில், வர்த்தகத்தின் இடையே ஏற்பட்ட அதிகபட்ச வீழ்ச்சியாகும்.கடந்த ஓராண்டில், டாடா மோட்டார்ஸ் பங்கு விலை, 56 சதவீதம் சரிவடைந்து உள்ளது.வருவாய் உயர்வுநடப்பு, 2018 –- 19ம் நிதியாண்டின், அக்., – டிசம்பர் காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய், 1.85 சதவீதம் உயர்ந்து, 16 ஆயிரத்து,ரூ. 477 கோடி ஆக உள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் லாபம், மூன்று மடங்கு உயர்ந்து, 618 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|