ரூ.100 கோடிக்கு மேல் சொத்து 61 பேரிடம் தான் இருக்கிறதாம்! ரூ.100 கோடிக்கு மேல் சொத்து 61 பேரிடம் தான் இருக்கிறதாம்! ... ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொது துறை வங்கி வாராக்கடன் ரூ.8.64 லட்சம் கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
23:39

புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்­பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், பொதுத் துறை வங்­கி­களின் வாராக் கடன், 8.95 லட்­சம் கோடி­யில் இருந்து, 8.64 லட்­சம் கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.


இது குறித்து, மத்­திய நிதித் துறை இணை அமைச்­சர், ஷிவ் பிர­தாப் சுக்லா, லோக்­ச­பா­வில் கூறி­ய­தா­வது:பொதுத் துறை வங்­கி­களின் வாராக் கடன், 2018, மார்ச்­சில், 8 லட்­சத்து, 95 ஆயி­ரத்து, 601 கோடி ரூபா­யாக இருந்­தது.இது, நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், ஏப்­ரல் – டிசம்­பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், 31 ஆயி­ரத்து, 168 கோடி ரூபாய் குறைந்து, 8 லட்­சத்து, 64 ஆயி­ரத்து, 433 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.


முந்­தைய ஆட்­சி­யில், கடன் வழங்­கி­ய­தில் காட்­டிய தீவி­ரம், சொத்து இருந்­தும் கடனை திரும்­பத் தரா­தது, மோசடி மற்­றும் ஊழல்­க­ளால், பொதுத் துறை வங்­கி­களின் இடர்ப்­பாட்டு கடன் உயர்ந்துள்ளது.இதுகுறித்து, 2015ல், ரிசர்வ் வங்­கி­யின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.இதை­ய­டுத்து, இடர்ப்­பாட்டு கடன்­களை, வாராக் கடன்­க­ளாக மாற்­றும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அத்­து­டன், வாராக் கடன்­களை மறு­சீ­ர­மைக்­கும் நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­பட்­டது.


இந்த திட்­டம், 2018, மார்ச் இறுதி வரை அம­லில் இருந்­தது. இந்த வகை­யில், இடர்ப்­பாட்டு கடன்­கள், வாராக் கடன்­க­ளாக மாற்­றப்­பட்­ட­தால், பொதுத் துறை வங்­கி­களின் மொத்த வாராக் கடன் அதி­க­ரித்­தது.கடந்த, 2014, மார்ச் நில­வ­ரப்­படி, 2 லட்­சத்து, 27 ஆயி­ரத்து, 264 கோடி ரூபா­யாக இருந்த வாராக் கடன், 2017, மார்ச்­சில், 6 லட்­சத்து, 84 ஆயி­ரத்து, 732 கோடி ரூபா­யாக உயர்ந்­தது.
எனி­னும், மத்­திய அரசு, 2015 -– 16ல் பொதுத் துறை வங்­கி­களின் வாராக் கடனை வெளிப்­ப­டை­யாக அங்­கீ­க­ரித்து, அவற்றை திரும்­பப் பெற எடுத்த நட­வ­டிக்­கை­கள், நல்ல பல­னைத்
தந்­துள்ளன.


கடந்த ஆண்டு, டிசம்­பர் வரை, பொதுத் துறை வங்­கி­கள், 3 லட்­சத்து, 33 ஆயி­ரத்து, 491 கோடி ரூபாய் கடனை வசூ­லித்­துள்ளன.பொதுத் துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்க, மத்­திய அரசு முயற்­சிப்­ப­தாக குற்­றம் சாட்­டப்­ப­டு­கிறது. அத்­த­கைய திட்­டம் எது­வும் மத்­திய அர­சி­டம் இல்லை.இவ்­வாறு அவர் கூறி­னார்.


Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)