பதிவு செய்த நாள்
09 பிப்2019
23:40
தஞ்சாவூர்:‘‘தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம், கைவினை கலைஞர்கள் உட்பட, 50
ஆயிரம் பேருக்கு, 180 கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது,’’
என, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர், சுவாமிநாதன் தெரிவித்தார்.
கடனுதவி
தஞ்சாவூரில்,
மத்திய அரசின் கைவினை துறை சார்பில், ‘சப்போர்ட் அண்டு அவுட்ரீச்’
திட்டத்தின், 100வது நாள் நிறைவு விழா நடந்தது.இதில், கைவினை
கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள், வங்கி கடனுதவி ஆகியவற்றை,
இந்திய அஞ்சல் துறையின் கூடுதல் செயலர், அனிதா பிரவீன் வழங்கினார்.
விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர், சுவாமிநாதன் பேசியதாவது:
மத்திய
அரசின் கைவினை துறை சார்பில், நாடு முழுவதும், 19 மாவட்டங்களில்
கைவினை கலைஞர்களுக்கான, சப்போர்ட் அண்டு அவுட்ரீச் என்ற திட்டம்,
கடந்த நவ., 2-ம் தேதி, பிரதமரால் துவங்கப்பட்டது.
கைவினை கலைஞர்கள்
இந்த திட்டத்தில், தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த,
100 நாட்களில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட
மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் தொழில் முதலீடு, முத்ரா வங்கி
கடனுதவி போன்ற திட்டங்களில், 180 கோடி ரூபாய் கடன்
வழங்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில், ‘கஜா’ புயலால்
பாதிக்கப்பட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கும் இந்த திட்டத்தில்
கடனுதவி வழங்கப்பட்டுள்ளது; அவர்களும், இழந்த பொருளாதாரத்தை
மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|