பதிவு செய்த நாள்
11 பிப்2019
00:02
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இருப்பினும், வார இறுதி நாட்களான, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவு, நம் சந்தையிலும் பிரதிபலித்தது. இதையடுத்து, இந்த இரு தினங்களில், 150 புள்ளிகள் சரிந்தது.
ஐரோப்பிய யூனியன், அதன் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என, கடந்த வியாழன் அன்று அறிவித்தது.ஜனவரி மாத இறுதியில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக மோதல் குறித்து, இந்த இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். ஆனால், அதிகாரிகள் பேச்சில் சுமுக நிலை எட்டப்படவில்லை.
அமெரிக்க அரசு கருவூலம், தொடர்ந்து நான்காவது நாளாக, வியாழன் அன்று, 2.6 சதவீதம் சரிந்தது.அனில் அம்பானியின், ரிலையன்ஸ் நிறுவன பங்குகள், கடந்த வாரம் அதிகப்படியான சரிவை சந்தித்தது.இவையெல்லாம் வார இறுதியில் நம் சந்தையை பாதித்தன.
வெள்ளியன்று சந்தைகள், 1 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. வாகன துறையைச் சேர்ந்த, ‘டாடா மோட்டார்ஸ்’ மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, அதிக நஷ்டத்தை சந்தித்தது. இதனால், அதன் பங்குகள் சந்தையில் கடும் வீழ்ச்சி கண்டன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 13 சதவீதம் குறைந்துள்ளது. ஆசிய நாணயங்களில் அதிகப்படியான மதிப்பு சரிந்தது, இந்திய ரூபாய் ஆகும். பிற நாடுகளின் நாணயத்தின் மதிப்பு, குறைந்த அளவிலேயே சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி சப்போர்ட், 10,905 மற்றும் 10,690 புள்ளிகள் ஆகும். ரெசிஸ்டென்ட், 10,835 ஆகும்.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|