பதிவு செய்த நாள்
12 பிப்2019
01:43
புதுடில்லி:அனில் அம்பானி குழுமத்தின், நான்கு நிறுவனங்களின் பங்கு விற்பனையில் விதிமீறல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ விசாரணையை துவக்கியுள்ளது.
கடந்த வாரம், ‘ஆர்காம்’ எனப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்கு விலை, தொடர்ந்து நான்கு நாட்கள் கடுமையான வீழ்ச்சியை கண்டன.இதையடுத்து, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம், 13ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிவடைந்தது.
இதற்கு, அப்பங்குகளை அடமானம் வைத்திருந்த, ‘எல் அண்டு டி’ மற்றும் எடல்வைஸ் குழுமங்கள் மேற்கொண்ட அதிரடி விற்பனை தான் காரணம் என, ரிலையன்ஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், செபியிடம் வலியுறுத்தியுள்ளன. இதையடுத்து, பங்கு விற்பனையில், விதிமீறல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து, செபி விசாரணையை துவக்கியுள்ளது. இதனிடையே, எல் அண்டு டி., மற்றும் எடல்வைஸ் குழுமங்கள், ரிலையன்ஸ் குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|