பதிவு செய்த நாள்
12 பிப்2019
01:47
புதுடில்லி:மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான புதிய திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்து வருவதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலர், அஜய் பிரகாஷ் ஷானி கூறியுள்ளார்.
‘மின்னணு தயாரிப்பு மாநாடு- – 2019’ல் பங்கேற்று, அவர் மேலும் கூறியதாவது:நாட்டில், மின்னணு பொருட்கள் தயாரிப்பு தொழில் வேகமாக வேரூன்றி வருகிறது. பிற நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் இங்கே வந்து, ஆலைகளை அமைத்து வருகின்றன.அடுத்தகட்டமாக, இந்நிறுவனங்களின் கூட்டாளிகளும் இங்கே பங்கேற்க வந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே, நாம் வெறுமனே மின்னணு பொருட்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏற்றுமதியிலும் கவனத்தை திருப்ப வேண்டும். இதற்கேற்ப, நம் புதிய திட்டங்கள் அனைத்தும் ஏற்றுமதியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, பன்னாட்டு நிறுவனங்கள் புதிய பொருட்கள், சேவைகளுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு, இந்தியாவை பயன்படுத்த துவங்கி இருக்கின்றன.இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது; எண்ணிலடங்கா வாய்ப்புகளை கொண்டதாகவும் மாறி வருகிறது.இந்நிலையில், வெறுமனே அசெம்பிள் செய்வதோடு நில்லாமல், உலகளாவிய விற்பனை பிரிவிலும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் பங்கேற்ற, ‘மெய்ட்’ எனும் தகவல் தொலை தொடர்பு தொழில்நுட்ப கூட்டமைப்பின் தலைவர், நிதின் குன்கோலியன்கர் கூறியதாவது:மின்னணு நுகர் பொருட்களுக்கான தேவை, கடந்த காலத்தில் பெருமளவு உயர்ந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள், மின்னணு சந்தையில், இந்தியாவை உலகளவிலான ஒரு மையமாக மாற்ற உதவி புரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|