பதிவு செய்த நாள்
12 பிப்2019
01:49
புதுடில்லி:கடந்த ஆண்டு, குடியிருப்பு விற்பனையில், வடக்கு, மேற்கு பிராந்தியங்களை விட, தென் மாநில நகரங்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, அனராக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:தென் மாநிலங்களின், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 2018ல், குடியிருப்புகள் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், முறையே, 18 மற்றும் 15 சதவீதமாக இருந்தது.புதிய குடியிருப்பு திட்டங்கள், முந்தைய ஆண்டை விட, 77 சதவீதம் அதிகரித்து, 67 ஆயிரத்து, 850 ஆக உயர்ந்துள்ளது.இந்த வளர்ச்சி, டில்லி உள்ளிட்ட தலைநகர் பிராந்தியத்தில், 16 சதவீதம்; மும்பை பெருநகர பிராந்தியம் மற்றும் புனேவில், 17 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்து இருந்தது.நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில், 6.73 லட்சம் குடியிருப்புகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதில், தென் மாநில நகரங்களின் பங்கு, 19 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. இது, தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 28 சதவீதமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் துறை மோசமாக இருந்தபோதிலும், தென் மாநில நகரங்களில் பாதிப்பு குறைவாகவே இருந்தது.அலுவலக பிரிவிலும், தென் மாநில நகரங்கள் சிறப்பாக திகழ்கின்றன. கடந்த ஆண்டு, தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில், 2.10 கோடி சதுர அடி அலுவலக இடங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது, தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 60 லட்சம் சதுர அடி என்ற அளவிற்கு மிகவும் குறைவாக உள்ளது.ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், இத்துறையில் அமைப்பு சார்ந்த செயல்பாடுகளுக்கு வித்திட்டு, வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களில் இருந்து, இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் மந்தநிலையில் இருந்து, தென் மாநில நகரங்களின் குடியிருப்பு சந்தைகள் மீண்டெழுந்து, வளர்ச்சியை நோக்கி பயணிப்பது தெளிவாக தெரிகிறது. இதில், ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறையைச் சேர்ந்தவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.சந்தோஷ் குமார், துணை தலைவர்,அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|