மின்னணு பொருட்கள் தயாரிப்பு உலகளவிலான மையமாகும் இந்தியாமின்னணு பொருட்கள் தயாரிப்பு உலகளவிலான மையமாகும் இந்தியா ... பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் : ரூபாயின் மதிப்பு உயர்வு பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் : ரூபாயின் மதிப்பு உயர்வு ...
சென்னை, பெங்களூரில் வீடு விற்பனை அமோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
01:49

புதுடில்லி:கடந்த ஆண்டு, குடியிருப்பு விற்பனையில், வடக்கு, மேற்கு பிராந்தியங்களை விட, தென் மாநில நகரங்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, அனராக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:தென் மாநிலங்களின், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 2018ல், குடியிருப்புகள் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், முறையே, 18 மற்றும் 15 சதவீதமாக இருந்தது.புதிய குடியிருப்பு திட்டங்கள், முந்தைய ஆண்டை விட, 77 சதவீதம் அதிகரித்து, 67 ஆயிரத்து, 850 ஆக உயர்ந்துள்ளது.இந்த வளர்ச்சி, டில்லி உள்ளிட்ட தலைநகர் பிராந்தியத்தில், 16 சதவீதம்; மும்பை பெருநகர பிராந்தியம் மற்றும் புனேவில், 17 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்து இருந்தது.நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில், 6.73 லட்சம் குடியிருப்புகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதில், தென் மாநில நகரங்களின் பங்கு, 19 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. இது, தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 28 சதவீதமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் துறை மோசமாக இருந்தபோதிலும், தென் மாநில நகரங்களில் பாதிப்பு குறைவாகவே இருந்தது.அலுவலக பிரிவிலும், தென் மாநில நகரங்கள் சிறப்பாக திகழ்கின்றன. கடந்த ஆண்டு, தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில், 2.10 கோடி சதுர அடி அலுவலக இடங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது, தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 60 லட்சம் சதுர அடி என்ற அளவிற்கு மிகவும் குறைவாக உள்ளது.ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், இத்துறையில் அமைப்பு சார்ந்த செயல்பாடுகளுக்கு வித்திட்டு, வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களில் இருந்து, இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் மந்தநிலையில் இருந்து, தென் மாநில நகரங்களின் குடியிருப்பு சந்தைகள் மீண்டெழுந்து, வளர்ச்சியை நோக்கி பயணிப்பது தெளிவாக தெரிகிறது. இதில், ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறையைச் சேர்ந்தவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.சந்தோஷ் குமார், துணை தலைவர்,அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)