பதிவு செய்த நாள்
12 பிப்2019
23:22
புதுடில்லி:ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், ஹாங்காங்கில், அன்னிய முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
அவர், 2018, டிசம்பரில், ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக பொறுப்பேற்ற பின், பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள், வங்கி சாரா நிதி நிறுவன தலைவர்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, முதன் முறையாக, ஹாங்காங்கில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.இந்த சந்திப்பு பயனுள்ள வகையில் இருந்ததாக, சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.ஒரு நிறுவனத்தில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களின் கடன் பத்திர முதலீடுகள், 20 சதவீதத்தை தாண்டக் கூடாது என, 2018, ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.எனினும், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களின் புதிய முதலீட்டிற்கு, இந்த விதிமுறையை அமல்படுத்த, மார்ச் வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இது, முதலீடுகளை மேற்கொள்ள தடையாக உள்ளதாக, அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.இந்நிலையில், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களின் கடன் பத்திர முதலீட்டு வரம்பு தொடர்பான விதிமுறை நீக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|