பதிவு செய்த நாள்
13 பிப்2019
23:32
புதுடில்லி:தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 54 ஆயிரம் பணியாளர்களை குறைக்க உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
‘ஆர்ஜியோ’ வருகையால், ‘பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஐடியா வோடபோன்’ உள்ளிட்ட நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. அதனால், வருவாய் அதிகரிப்பு வழிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 1.80 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
இது, இதர நிறுவனங்களை ஒப்பிடும் போது, ஐந்து மடங்கு அதிகம். இவர்களுக்கு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.அதனால், தற்போது ஓய்வு வயது, 60ஐ நிர்ணயித்து, 54 ஆயிரம் பணியாளர்களை குறைக்க, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், 33 ஆயிரம் பேர் மூலம், அடுத்த ஆறு ஆண்டுகளில், 13 ஆயிரத்து, 895 கோடி ரூபாய் மிச்சமாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 35 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.நாளை நடைபெறும் இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில், இது குறித்து விவாதிக்கப்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|