பதிவு செய்த நாள்
14 பிப்2019
23:18
புதுடில்லி:சிறப்பு ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘நியோஜென் கெமிக்கல்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து பெற்றுள்ளது.
இந்நிறுவனம், லித்தியம், புரோமைன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ரசாயனங்களை தயாரித்து வருகிறது.இந்த நிறுவனம். கடந்த ஆண்டு நவம்பரில் பங்குவெளியீட்டுக்கு வருவதற்காக, செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது. 70 கோடி ரூபாய் திரட்டும் வகையில், புதிய பங்குகளை இந்நிறுவனம் வெளியிட உள்ளது.
மேலும், 29 லட்சம் ரூபாய் வரையில் நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு கடன்களை அடைக்கவும், செயல்பாட்டு மூலதன தேவைகளுக்கும், நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘இங்கா அட்வைசர்ஸ் பாட்லிவாலா அண்ட் கரானி செக்யூரிட்டீஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
நியோஜென் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த ஆண்டில் இதுவரை, ஏழு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|