உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள்  புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு பரிசீலனை உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள் புதிய ... ...  மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேயிலை ஏற்றுமதி மந்தம் வருவாய் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
23:24

புதுடில்லி:இந்தியாவிலிருந்து, கடந்தாண்டில், 24.91 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி ஆகியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, சிறிது குறைவாகும். 2017ல், 25.19 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து, இந்திய தேயிலை வாரியம் மேலும் அறிவித்துள்ளதாவது:கடந்தாண்டு ஜனவரி முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தேயிலையின் சராசரி விலை, கிலோவுக்கு, 206.03 ரூபாயாக இருந்தது. இதுவே, அதற்கு முந்தைய ஆண்டில், 197.99 ரூபாயாக இருந்தது.


ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி, கடந்தாண்டில், 6.11 கோடி கிலோவாக குறைந்து விட்டது. இதுவே, 2017ல், 6.40 கோடி கிலோவாக இருந்தது.இந்தியாவிலிருந்து தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஈரான், 3.06 கோடி கிலோ தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டில் இது, 2.96 கோடி கிலோவாக இருந்தது.


சீனாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் முயற்சியில், ஓரளவுக்கு தான் வெற்றி பெற முடிந்துள்ளது. 2017ல், 85.2 லட்சம் கிலோ ஏற்றுமதியான நிலையில், கடந்தாண்டு, 1.02 கோடி கிலோ சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான ஏற்றுமதியும் சிறிது அதிகரித்துள்ளது.


2017ல், 1.47 கோடி கிலோவாக இருந்தது, கடந்தாண்டில், 1.58 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது.கடந்த, 2018ம் ஆண்டில் ஏற்றுமதி ஆன தேயிலையின் மதிப்பு, 5,132.37 கோடி ரூபாயாகும். இதுவே, 2017ல், 4,987.59 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)