பதிவு செய்த நாள்
14 பிப்2019
23:24
புதுடில்லி:இந்தியாவிலிருந்து, கடந்தாண்டில், 24.91 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி ஆகியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, சிறிது குறைவாகும். 2017ல், 25.19 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய தேயிலை வாரியம் மேலும் அறிவித்துள்ளதாவது:கடந்தாண்டு ஜனவரி முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தேயிலையின் சராசரி விலை, கிலோவுக்கு, 206.03 ரூபாயாக இருந்தது. இதுவே, அதற்கு முந்தைய ஆண்டில், 197.99 ரூபாயாக இருந்தது.
ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி, கடந்தாண்டில், 6.11 கோடி கிலோவாக குறைந்து விட்டது. இதுவே, 2017ல், 6.40 கோடி கிலோவாக இருந்தது.இந்தியாவிலிருந்து தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஈரான், 3.06 கோடி கிலோ தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டில் இது, 2.96 கோடி கிலோவாக இருந்தது.
சீனாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் முயற்சியில், ஓரளவுக்கு தான் வெற்றி பெற முடிந்துள்ளது. 2017ல், 85.2 லட்சம் கிலோ ஏற்றுமதியான நிலையில், கடந்தாண்டு, 1.02 கோடி கிலோ சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான ஏற்றுமதியும் சிறிது அதிகரித்துள்ளது.
2017ல், 1.47 கோடி கிலோவாக இருந்தது, கடந்தாண்டில், 1.58 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது.கடந்த, 2018ம் ஆண்டில் ஏற்றுமதி ஆன தேயிலையின் மதிப்பு, 5,132.37 கோடி ரூபாயாகும். இதுவே, 2017ல், 4,987.59 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|