தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.224 உயர்வுதங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.224 உயர்வு ...  குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ஒதுக்கீடு குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ... ...
வர்த்தகம் » ஜவுளி
நவீன சாயமேற்றும் இயந்திரம் திருப்பூர் வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
23:35

திருப்பூர்:இத்தாலி நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, அதிநவீன சாயமேற்றும் இயந்திரம், திருப்பூர் வருகிறது.


கோவை, திருப்பூர் மாவட்டங்கள், விசைத்தறி துணி, பின்னலாடை உற்பத்தி ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு சாயமேற்ற, வெவ்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, எம்.சி.எஸ்., நிறுவனம், ஓவன் மற்றும் நிட்டிங் துணிகளை ஒரே இடத்தில் சாயமேற்றும் புது வகை இயந்திரத்தை தயாரித்துள்ளது.


‘டைனமிக் ஸ்பின்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம், தோற்றத்தில், பின்னல் துணிக்கு சாயமேற்றும், ‘சாப்ட்புளோ’ இயந்திரம் போன்றது.ஆனால், சாயமேற்றுவதற்கு தனித்தனி சேம்பர்கள், கூடுதல் பம்ப், நாசில்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த இயந்திரம், ஓவன் மற்றும் நிட்டிங் துணிகளுக்கு மிக நேர்த்தியாக சாயமேற்றும் திறனைக் கொண்டுள்ளது.


இதில், 3.5 லிட்டர் தண்ணீரில், 1 கிலோ துணிக்கு சாயமேற்ற முடியும்.இந்த அதிநவீன இயந்திரம், மார்ச் 1ல், திருப்பூரில், திருமுருகன்பூண்டி அருகே துவங்கும், ‘நிட் டெக்’ கண்காட்சியில், இடம்பெற உள்ளது.ஓவன், நிட்டிங் துறை சார்ந்து, சாயமேற்றும் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. இந்நிறுவனங்கள், இரு வகை துணிகளுக்கு சாயமேற்ற, அதிக முதலீட்டில், வெவ்வேறு இயந்திரங்களை நிறுவ வேண்டியுள்ளது.


இதற்கு தீர்வாக, திருப்பூருக்கு முதன் முறையாக, இத்தாலி இயந்திரம் வருகிறது. இது, பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு புதிய உத்வேகத்தை தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)