தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.224 உயர்வுதங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.224 உயர்வு ...  குவிண்டாலுக்கு ரூ.200   சர்க்கரை விலை உயர்வு குவிண்டாலுக்கு ரூ.200 சர்க்கரை விலை உயர்வு ...
குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
23:37

திருப்பூர்:குறு, சிறு நிறுவனங்களுக்கான சலுகை திட்டங்கள் மீண்டும் தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இத்துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


குறு, சிறு நிறுவனங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இயந்திரம் கொள்முதல் தொகையில், 15 சதவீத மானியம், ‘லீன்’ பயிற்சி திட்டம், ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ மானியம், காப்புரிமை, தரச்சான்று மானியம் என, பல்வேறு சலுகை திட்டங்கள் உள்ளன.இந்த சலுகைகளுக்கான கால வரம்பு, 2017 மார்ச்சுடன் முடிந்தது.


எனவே, சலுகை திட்டங்களை மீண்டும் செயல்படுத்தக் கோரி, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு, மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இதுகுறித்து, சமீபத்தில் திருப்பூர் வந்த, பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் குறு, சிறு நிறுவனங்களுக்கு மீண்டும் சலுகை திட்டம் தொடர அனுமதி அளித்து, 2,900 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து, தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர், அண்ணாதுரை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி, கறிக்கோழி வளர்ப்பு, விசைத்தறி, கொப்பரை உற்பத்தி என, 34 ஆயிரம் குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன.எங்கள் கோரிக்கையை ஏற்று, குறு, சிறு நிறுவனங்களுக்கான சலுகை திட்டங்கள் தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)