பதிவு செய்த நாள்
15 பிப்2019
23:44
புதுடில்லி:உள்நாட்டில், ‘டியாகோ’ கார் விற்பனை, இரண்டு லட்சத்தை கடந்துள்ளதாக, அதன் தயாரிப்பு நிறுவனமான, ‘டாடா மோட்டார்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ், பயணியர் வாகன வர்த்தக பிரிவின் தலைவர், மயாங்க் பரீக் கூறியதாவது:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2016, ஏப்ரலில், டியாகோ காரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில், ‘ஹாட்ச்பேக்’ எனப்படும், சிறிய வகை கார்களில், சில மாடல்கள் தான், சந்தையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன.அவற்றில் ஒன்றாக, டியாகோ கார் இடம் பெற்றுள்ளது.
சிறந்த தொழில்நுட்பத்தில், கவர்ச்சிகரமான வடிவமைப்பில், சொகுசான சவாரிக்கு ஏற்றதாக டியாகோ உள்ளது. அதனால், அறிமுகமாகி, மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், இந்த காருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.உள்நாட்டில், டியாகோ கார் விற்பனை, இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. பெட்ரோல், டீசல் என, இரு வகை மாடல்களின் விற்பனையும் இதில் அடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|