பதிவு செய்த நாள்
18 பிப்2019
11:40
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(பிப்., 18, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.94 புள்ளிகள் சரிந்து 35,650.01-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 44.45 புள்ளிகள் சரிந்து 10,679.95-ஆகவும் வர்த்தகமாகின.
நடப்பு நிதிநிலை தொடர்பாக ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன் மீதான எதிர்பார்ப்பாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.71.38ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|