பதிவு செய்த நாள்
19 பிப்2019
10:50
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில், வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று(பிப்., 19) உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.21 புள்ளிகள் உயர்ந்து 35,622.65ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 38.90 புள்ளிகள் உயர்ந்து 10,679.85ஆகவும் வர்த்தகமானது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வு காரணமாகவும், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டி வருவதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கி இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்ரபதி சிவாஜியின் ஜெயந்தியை முன்னிட்டு, கரன்சி சந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நேற்றைய மதிப்பான ரூ.71.34ல் தொடருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|