தங்கம் விலை ரூ.25,600-ஐ தொட்டதுதங்கம் விலை ரூ.25,600-ஐ தொட்டது ...  சேலம் உருக்காலையை விற்க முடிவு சேலம் உருக்காலையை விற்க முடிவு ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்திற்கு கூடுதல் சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
07:17

புதுடில்லி : ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் முதலீட்டிற்கான, ‘ஏஞ்செல் டேக்ஸ்’ விதிகள் தளர்த்தப்பட்டு, கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வலைதளங்கள் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், ஓலா, ஊபர்’ போன்றவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன.இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க, ‘ஏஞ்செல் பண்டு’ நிறுவனங்கள், பங்கு மூலதன முறையில், முதலீடு செய்கின்றன. இதற்கு, வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.

எனினும், இந்த முதலீடு, ஸ்டார்ட் அப் நிறுவன சந்தை மதிப்பை விஞ்சியிருந்தால், 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை, ‘ஏஞ்செல் டேக்ஸ்’ என்கின்றனர்.பாதிப்புஇது, முதலீடு என்ற பெயரில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தையும், வரி ஏய்ப்பையும் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரியால், நேர்மையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன.

இது குறித்த புகார்களை தொடர்ந்து, விரைவில், ஏஞ்செல் வரி விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையான, டி.பி.ஐ.ஐ.டி., தெரிவித்திருந்தது.அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் முதலீட்டிற்கான, வரிவிலக்கு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏஞ்செல் பண்டு நிறுவனத்தின் பங்கு மூலதனம் உட்பட, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின், 10 கோடி ரூபாய்கு உட்பட்ட முதலீட்டிற்கு, தற்போது வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு, 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்தற்போது, ஒரு நிறுவனம், பதிவு செய்த நாள் முதல், ஏழு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்து, ஒரு நிதியாண்டு விற்றுமுதல், 25 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அது, ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்படும். இந்த வரம்பு, முறையே, 10 ஆண்டுகள் மற்றும் 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் விற்றுமுதல் அல்லது 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், பங்குச்சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 25 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீட்டிற்கு வரி விலக்கு கோரலாம்.

இது, வெளிநாடு வாழ் இந்தியர்கள், மாற்று முதலீட்டு நிதியங்களுக்கும் பொருந்தும்.அசையா சொத்துகள், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள், கடன்கள், பிற நிறுவன பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யாத ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வரி விலக்கு பெற தகுதி உண்டு.டி.பி.ஐ.ஐ.டி.,யின் அங்கீகாரம் பெற்ற, குறிப்பிட்ட சொத்துகளில் முதலீடு செய்யாத, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வரி விலக்கு சலுகை பெறலாம்.

இதற்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், டி.பி.ஐ.ஐ.டி.,யிடம், சுய பிரகடன அறிக்கை அளித்தால் போதும். அது, வருமான வரி துறைக்கு அனுப்பப்படும். வரி விலக்கு கோரி, வேறு எங்கும் விண்ணப்பிக்க தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.புதிய விதிமுறைகள், ஸ்டார்ட் அப் தொழிலை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகள் உயர வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஸ்டார்ட் அப் இந்தியா’மத்திய அரசு, 2016, ஜனவரியில் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஓராண்டில், சராசரியாக, 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ‘ஏஞ்செல் பண்டு’ நிறுவனங்களிடம் இருந்து, முதலீடு கிடைக்கிறது. நாட்டில், 14ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)