பதிவு செய்த நாள்
20 பிப்2019
10:59
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளான இன்று(பிப்., 20) அதிக எழுச்சியுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 269.24 புள்ளிகள் உயர்ந்து 35,621.85-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 74.40 புள்ளிகள் உயர்ந்து 10,678.75ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், ரூபாயின் மதிப்பு உயர்வு, முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டுவதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் 3 காசுகள் உயர்வுடன் துவங்கிய ரூபாயின் மதிப்பு காலை 10.45 மணியளவில் 13 காசுகள் உயர்ந்து ரூ.71.21ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|