பதிவு செய்த நாள்
23 பிப்2019
02:48
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நிதி நிறுவனங்கள் வழங்கும் நுண்கடன், அதிகரித்து வருகிறது.நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்பட்ட மொத்த நுண்கடன், 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 65 ஆயிரத்து, 90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது குறித்து, ‘சா தன்’ எனும் நிறுவனம், 124 நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நுண்கடன், 65 ஆயிரத்து, 90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 6 சதவீதம் உயர்வாகும்.அதேசமயம், கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல், டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, தற்போது, 37 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.நுண்கடன் வழங்கும் அனைத்து வகையான நிறுவனங்கள், கடந்த ஆண்டு டிசம்பர், 31ம் தேதி வரை வழங்கிய கடனின் அளவு, 1 லட்சத்து, 57 ஆயிரத்து, 497 கோடி ரூபாய்.இதில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 60 ஆயிரத்து, 117 கோடி ரூபாயை வழங்கி முதலிடத்தில் உள்ளன. இவற்றின் சந்தை பங்களிப்பு, 38.17 சதவீதம்.அடுத்தபடியாக வங்கிகள், 52 ஆயிரத்து, 556 கோடி ரூபாயை வழங்கி, 33.37 சதவீதம் பங்களிப்பை பெற்றிருக்கின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|