பதிவு செய்த நாள்
23 பிப்2019
02:51
புதுடில்லி: ‘வீடியோகான்’ நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, வங்கி கடன் வழங்கியது தொடர்பான வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான, சந்தா கோச்சாரை, ‘தேடப்படும் நபர்’ என, சி.பி.ஐ., அறிவித்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் இருந்த போது, 2012ம் ஆண்டில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.இதன் மூலம் அவரது கணவரும், உறவினர்களும் பயனடைந்ததாகவும் புகார் கூறப்பட்டது.இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம், முன்னாள் நீதிபதி, ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில், தனி விசாரணைக்கு உத்தரவிட்டது.கடந்த ஆண்டு, அக்டோபரில், ஐ,.சி.ஐ.சி..ஐ., வங்கி பதவியை, சந்தா கோச்சார் ராஜினாமா செய்தார். ஸ்ரீ கிருஷ்ணா குழு, சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு, கடன் வழங்க ஒப்புதல் அளித்தார் என தெரிவித்ததால், சந்தா கோச்சாரின் ராஜினாமாவை, பதவி நீக்கமாக மாற்ற, இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.இதற்கிடையே, சி.பி.ஐ., இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வந்ததுகடந்த மாதம், வீடியோகான் நிறுவன தலைவர், வேணுகோபால் துாத், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.வீடியோகான் நிறுவன தலைவர், வேணுகோபால் துாத், தீபக் கோச்சார் ஆகியோரை தேடப்படும் நபர்களாக, சி.பி.ஐ., அறிவித்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சந்தா கோச்சாரை தேடப்படும் நபராக, சி.பி.ஐ., நேற்று அறிவித்தது. வேணுகோபால் துாத், தீபக் கோச்சார் ஆகியோரை தேடப்படும் நபர்களாக, சி.பி.,ஐ., மீண்டும் அறிவித்துள்ளது.இதையடுத்து, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லவிடாமல் தடுக்க, விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, சி.பி.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், ‘வழக்கு பதிவு செய்த பின், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனையில், கிடைத்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன’ என, சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|