பொதுத்துறை வங்கிகளுக்கு கிடைத்த மறுவாழ்வு!பொதுத்துறை வங்கிகளுக்கு கிடைத்த மறுவாழ்வு! ...  அப்படியா அப்படியா ...
முதல்முறை முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2019
23:35

நிதி நிர்வாகம் சிக்கலானது என கருதி, பலரும் இலக்குகளை வகுத்துக் கொள்வதையும், திட்டமிடுவதையும் தவிர்க்கின்றனர். இதனால், கணக்கில்லாமல் செலவு செய்யும், இலக்கில்லாமல் சேமித்து முதலீடு செய்யும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, முதலீட்டாளர்கள், குறிப்பாக முதல்முறை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:

பணவீக்கம்:
இருபது ஆண்டுகள் கழித்து யோசித்துப் பாருங்கள். அப்போது, வீட்டுச்செலவு, கல்விச்செலவு, விலைவாசி எப்படி இருக்கும் என, நினைத்துப் பாருங்கள். இவை பல மடங்கு அதிகரித்திருக்கும்-. காரணம் பணவீக்கம்! எனவே, பணவீக்கத்தின் தாக்கத்தை வெல்லும் நிலையை பெற வேண்டும் என்பதே முதலீடு செய்வதன் நோக்கம்.நிதி இலக்குகள்: முதலீடு செய்வதன் அவசியத்தை உணர்ந்தபின், உங்களுக்கான இலக்குகளை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். இலக்குகளை குறுகிய கால இலக்கு (1 – 3 ஆண்டுகள்), மத்திய கால இலக்கு (3 – 7 ஆண்டுகள், நீண்ட கால இலக்கு (10 ஆண்டுகளுக்கு மேல்) என, பிரித்துக்கொள்ள வேண்டும்.

ஓய்வு காலம்:
நிதி இலக்குகளுக்கு ஏற்ப சேமித்து முதலீடு செய்ய வேண்டும். குறுகிய, மத்திய கால இலக்குகளுக்கு ஏற்ற நிதி சாதனங்களை நாட வேண்டும். ஓய்வு காலத்திற்கான சேமிப்பு நீண்ட கால இலக்குகளில் முக்கியமானவை. ஓய்வு காலத்திற்கான சேமிப்பை இயன்றவரை முன்னதாக துவங்குவது நல்லது.

சமபங்கு பலன்:
நிதி சாதனங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். நிதி சாதனங்கள், சமபங்கு சார்ந்த முதலீடு, நிரந்தர வருமானம் தருபவை (கடன்சார் முதலீடு) என இரு வகையாக அமைகின்றன. சம்பங்குகளில் ரிஸ்க் அதிகம் என்றாலும் பலன் அதிகம். நீண்ட கால நோக்கில் ஏற்றவை.

கால அளவு:
முதலீடு அளிக்கும் பலன், அதன் கால அளவையும் பொருத்தது. பொதுவாக நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால், கூட்டு வட்டி அல்லது மறு முதலீட்டின் பலனை பெறலாம். முன்னதாக துவங்கும் போது இது அதிக பலன் தரும். மேலும் ஒருவர் தன் ரிஸ்க் தன்மைக்கேற்ப முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)