பதிவு செய்த நாள்
25 பிப்2019
23:19
புதுடில்லி : ‘அதானி’ குழுமம், ஐந்து விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய அரசு, ஆறு விமான நிலையங்களை பராமரித்து, நிர்வகிக்க, வலைதளத்தில் ஏலம் நடத்தியது.அதில், கவுதம் அதானி தலைமையிலான, ‘அதானி எண்டர்பிரைசஸ்’ ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ விமான நிலையங்களை கைப்பற்றியது.
ஒரு விமான நிலையத்தில், ஒரு பயணி வாயிலான மாத வருவாய் அடிப்படையில், ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.அதில், ‘ஜி.எம்.ஆர்., – ஏ.எம்.பி., கேப்பிடல்’ ஆகிய நிறுவனங்கள் கேட்டதை விட, இரு மடங்கு அதிக தொகையை குறிப்பிட்டு, அதானி குழுமம், ஏலத்தில் வெற்றி பெற்றது. அசாம் மாநிலம், கவுஹாத்தி விமான நிலைய ஏலம், இன்று நடைபெறுகிறது. இதுவரை, விமான நிலைய நிர்வாகத்தில், ஜி.எம்.ஆர்., மற்றும், ஜி.வி.கே., குழுமங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அதனால், இத்துறையில் போட்டியை அதிகரிக்க, முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் நுழையலாம் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து, அதானி எண்டர்பிரைசஸ், முதன் முறையாக விமான நிலைய நிர்வாக துறையில் கால் பதித்து, ஐந்து விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பை பெற்றுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இக்குழுமம், முதன்முறையாக, காற்றாலை, சூரிய மின் உற்பத்தி, மின் பகிர்வு, விமானம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இறங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|