அரசு, ‘இ – சேவை’ வழங்க 500 மையங்களுக்கு அனுமதி அரசு, ‘இ – சேவை’ வழங்க 500 மையங்களுக்கு அனுமதி ...  ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனங்களை வாராக்கடன் பிரிவில் சேர்க்க தடை ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனங்களை வாராக்கடன் பிரிவில் சேர்க்க தடை ...
5 விமான நிலைய நிர்வாகம்; ‘அதானி’ குழுமம் கைப்பற்றியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
23:19

புதுடில்லி : ‘அதானி’ குழுமம், ஐந்து விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய அரசு, ஆறு விமான நிலையங்களை பராமரித்து, நிர்வகிக்க, வலைதளத்தில் ஏலம் நடத்தியது.அதில், கவுதம் அதானி தலைமையிலான, ‘அதானி எண்டர்பிரைசஸ்’ ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ விமான நிலையங்களை கைப்பற்றியது.

ஒரு விமான நிலையத்தில், ஒரு பயணி வாயிலான மாத வருவாய் அடிப்படையில், ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.அதில், ‘ஜி.எம்.ஆர்., – ஏ.எம்.பி., கேப்பிடல்’ ஆகிய நிறுவனங்கள் கேட்டதை விட, இரு மடங்கு அதிக தொகையை குறிப்பிட்டு, அதானி குழுமம், ஏலத்தில் வெற்றி பெற்றது. அசாம் மாநிலம், கவுஹாத்தி விமான நிலைய ஏலம், இன்று நடைபெறுகிறது. இதுவரை, விமான நிலைய நிர்வாகத்தில், ஜி.எம்.ஆர்., மற்றும், ஜி.வி.கே., குழுமங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அதனால், இத்துறையில் போட்டியை அதிகரிக்க, முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் நுழையலாம் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து, அதானி எண்டர்பிரைசஸ், முதன் முறையாக விமான நிலைய நிர்வாக துறையில் கால் பதித்து, ஐந்து விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பை பெற்றுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இக்குழுமம், முதன்முறையாக, காற்றாலை, சூரிய மின் உற்பத்தி, மின் பகிர்வு, விமானம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இறங்கியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)