ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனங்களை வாராக்கடன் பிரிவில் சேர்க்க தடை ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனங்களை வாராக்கடன் பிரிவில் சேர்க்க தடை ...  ஆபரணம், வாகன உதிரிபாக துறைக்கும் சலுகை தேவை; மத்திய அரசுக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு கோரிக்கை ஆபரணம், வாகன உதிரிபாக துறைக்கும் சலுகை தேவை; மத்திய அரசுக்கு ஏற்றுமதி ... ...
தேசிய ரப்பர் கொள்கை வரைவறிக்கை வெளியீடு; சிறு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மானியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
23:22

புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், தேசிய ரப்பர் கொள்கையின் வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ரப்பர் உற்பத்தியை உயர்த்தி, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை ரப்பர்:
ரப்பர் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோருக்கு மானிய சலுகைகள் வழங்கப்படும். ரப்பர் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு, மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.

இயற்கை ரப்பரை, வேளாண் பொருட்களில் சேர்த்து, அதன் உற்பத்தியில் கிடைக்கும் வருவாயை, வேளாண் வருவாயாக வகைப்படுத்தி, சலுகைகள் வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்படும்.மத்திய – மாநில அரசுகளின், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளில், ரப்பர்துறையும் இணைக்கப்படும். ரப்பர் விவசாயிகளுக்கு, பயிர் மானியம் வழங்கப்படும். அதில், ஏழைகள், சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏல முறை:
வனப் பகுதிக்கு பாதிப்பில்லாமல், இயற்கை ரப்பர் பயிர் பரப்பை அதிகரித்து, ரப்பர் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படும். ரப்பர் விலையின் ஏற்ற, இறக்கம், அதை சார்ந்துள்ள லட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளை பாதிக்கிறது. அதனால், விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பிற்கு, பயிர் காப்பீடு மற்றும் ரப்பர் ஆதரவு விலை நிர்ணயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ‘நபார்டு’ வங்கியுடன் ஆலோசித்து, ரப்பர்பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

ரப்பர் விலையில், ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளுக்கு, ஏல முறை அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆறாவது இடம்:
உலக ரப்பர் உற்பத்தியில், ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2017 -– 18ம் நிதியாண்டில், 6.94 லட்சம் டன் ரப்பர் உற்பத்தியானது. மொத்த ரப்பர் உற்பத்தியில், கேரளா மற்றும் தமிழகத்தின் பங்கு, 81 சதவீதம்.இயற்கை ரப்பர் பயன்பாட்டில், ஆண்டுக்கு, 11 லட்சம் டன்னுடன், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டில், ரப்பர் விவசாயிகள், 13 லட்சம் பேர் உள்ளனர். இத்துறையில், ஆறு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாட்டின் ரப்பர் தேவையில், 40 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)