தேசிய ரப்பர் கொள்கை வரைவறிக்கை வெளியீடு; சிறு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மானியம் தேசிய ரப்பர் கொள்கை வரைவறிக்கை வெளியீடு; சிறு விவசாயிகள், ... ...  அப்படியா    அப்படியா ...
ஆபரணம், வாகன உதிரிபாக துறைக்கும் சலுகை தேவை; மத்திய அரசுக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
23:23

புதுடில்லி : ‘ஆபரணம், வாகன உதிரிபாகம் உள்ளிட்ட துறைகளுக்கும், ஏற்றுமதி சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும்’ என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பான எப்.ஐ.இ.ஓ., மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, இக்கூட்டமைப்பு தலைவர், கணேஷ் குமார் குப்தா கூறியதாவது:மத்திய அரசு, தேசிய மின்னணு வர்த்தக கொள்கை தொடர்பான வரைவறிக்கையை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.எனினும், ஒவ்வொரு துறைக்கும் பல சட்டங்கள், கொள்கைகள் உள்ளதால், அனைத்திற்கும் பொருந்துமாறு, மின்னணு வணிக கொள்கை சீராக இருக்க வேண்டும்.

தற்போது, கைவினைப் பொருள், கைத்தறி ஆடை, புத்தகம், தோல் காலணி, விளையாட்டுப் பொருள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், வரிச் சலுகை கிடைக்கிறது.ஆனால், இச்சலுகை, வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதிக்கு வழங்கப்படுவதில்லை. இத்துறையில், ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.அதனால், வாகன உதிரிபாகங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கும் வரிச் சலுகையை விரிவுபடுத்த வேண்டும்.

வரம்பு:
தற்போது, ‘கூரியர்’ எனப்படும் விரைவு அஞ்சல் சேவையில், அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம். இந்த வரம்பை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தினால், அதிக அளவிலான பொருட்களை விரைவாக அனுப்பவும், பெறவும் முடியும்.மின்னணு வர்த்தகத்தில், சில்லரை விற்பனைக்கான ஏற்றுமதி நடைமுறை, மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படாமல், இன்னும் ஆவண வடிவிலேயே நடைபெற்று வருகிறது.

அதனால், உடனடியாக, அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம், இந்திய நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க முடியும்.மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சர்வதேச அளவில், புதிய சந்தைகளை அடையாளம் காணவும் வழி பிறக்கும்.

ஆழமாக வேரூன்றி வரும் தகவல் தொழில்நுட்ப வசதியும், பரவலாக பெருகி வரும் மின்னணு பயன்பாடும், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரியும்.மத்திய அரசு, உடனடியாக, இக்கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

எம்.இ.ஐ.எஸ்., திட்டம்:
மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க, 2015ல், எம்.இ.ஐ.எஸ் என்ற, வர்த்தக ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில், பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நாடு மற்றும் பொருட்களை பொறுத்து, 2, 3 மற்றும் 5 சதவீத வரிச் சலுகை, ஆவண வடிவில் வழங்கப்படும்.

ஏற்றுமதியாளர்கள், தங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல் அடிப்படையில் வரிச் சலுகை ஆவணத்தை பெறுவர். அவர்கள், இந்த ஆவணம் மூலம், மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய வரியை கழித்துக் கொள்ளலாம். அதுபோல, ஜி.எஸ்.டி.,க்கும் இதை பயன்படுத்தலாம். கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)