பதிவு செய்த நாள்
26 பிப்2019
23:25
புதுடில்லி : வீடுகளுக்கு தேவையான காற்றை சுத்தம் செய்து தரும், ‘ஏர் பியூரிபையர்’ சாதனங்களுக்கான சந்தை, இந்தியாவில், 2023ம் ஆண்டில், 277 கோடி ரூபாய் சந்தையாக உயரும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அசோசெம்-டெக்சயி ஆகியவற்றின் கூட்டு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், ஏர் பியூரிபையர் சாதனங்களுக்கான சந்தை, 100 கோடி ரூபாய் என்ற தற்போதைய நிலையிலிருந்து, 276.83 கோடி ரூபாய் சந்தையாக, 2023ம் ஆண்டில் வளர்ச்சி அடையும்.மேலும், கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம், 29 சதவீதமாக அதிகரிக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி, தீவிரமான சந்தை வியூகங்கள், காற்று மாசு காரணமாக ஏற்படும் உடல்நல குறைபாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் மனோநிலை ஆகியவை, ஏர் பியூரிபையரின் விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும்.
கடந்த, 2017ல், இந்தியாவின் மொத்த ஏர் பியூரிபையரின் சந்தை வருமானத்தில், 22 சதவீதம், வீடுகளுக்கான பிரிவிலிருந்து கிடைத்து உள்ளது. டில்லி உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளில், காற்று மாசு அதிகரித்து வருவதால், அங்கு ஏர் பியூரிபையருக்கான சந்தை வளர்ந்து வருகிறது.
தொழிற்சாலைக்கு தேவைப்படும் காற்று மாசு வடிகட்டிகளுக்கான சந்தை, 2017ல், 2,082 கோடி ரூபாயாக இருந்தது, 2,788 கோடி ரூபாய் சந்தையாக வளர்ச்சி பெறும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|