எம்.எஸ்.எம்.இ., சமாதான் கவுன்சிலில் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு எம்.எஸ்.எம்.இ., சமாதான் கவுன்சிலில் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு ...  கடன் தீர்வில் பின்வாங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; திவால் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு கடன் தீர்வில் பின்வாங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; திவால் சட்டத்தை ... ...
வங்கி அதிகாரிகள் ஊக்க ஊதியத்திற்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2019
23:30

மும்பை : தனியார் மற்றும் அன்னிய வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கும் ஊக்க ஊதியச் சலுகைகளுக்கு, ரிசர்வ் வங்கி, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், உயர் அதிகாரிகளுக்கு, ஊதியத்துடன், அவர்களின் செயல்பாடுகளை பொறுத்து, ஊக்க ஊதிய சலுகைகளையும் வழங்குகின்றன.இந்த வகையில், ரிசர்வ் வங்கி, 2012, ஜனவரியில், தனியார் மற்றும் அன்னிய வங்கி உயர் அதிகாரிகள் பெறும் ஊக்க ஊதியச் சலுகை தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு மோசமாக உள்ள நிலையிலும், அவற்றின் உயரதிகாரிகள், ஏற்கனவே நிர்ணயித்த, ஊக்க ஊதியச் சலுகைகளை குறைவின்றி பெறுவதை தடுக்கும் நோக்கிலும், விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நடைமுறையை பின்பற்றி, வங்கியின் முழு நேர இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான ஊக்க ஊதிய விதிமுறையை அமல்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, தனியார் மற்றும் அன்னிய வங்கிகளுக்கான ஊக்க ஊதிய விதிமுறைகளை மறுஆய்வு செய்து, வரைவறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.தற்போது, ஒருவர் தன் ஊதியத்தின் அடிப்படையில், 70 சதவீதம் வரை, ஊக்க ஊதியம் பெறலாம். இதில், ஊழியர்களுக்கான பங்கு ஒதுக்கீடு சேர்க்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையில், இந்த பங்கு ஒதுக்கீடு சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியத்திற்கான அதிகபட்ச வரம்பு, ஊதியத்தில், 200 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஊக்க ஊதிய வரம்பு உயர்வுக்கு ஏற்ப, அதை பெறுவோரின் பணிப் பொறுப்பும் அதிகரிக்கும். வங்கியின் நிதிச் செயல்பாடுகள் மோசமானால், ஊக்க ஊதியச் செலவினமும் குறையும்.மேலும், ஊக்க ஊதியத்தில், குறைந்தபட்சம், 50 சதவீதத்தை, ரொக்கம் சாரா முறையில் வழங்க வேண்டும்.ஊக்க ஊதிய நிர்ணயம் தொடர்பாக, உரிய சட்ட விதிகளின்படி, கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை வங்கிகள் செயல்படுத்த வேண்டும்.

பிற இனங்களில் மேற்கொள்ளும் முதலீட்டின் அடிப்படையில், வரி மதிப்பீட்டு ஆண்டிற்கு, ஊக்க ஊதியத்தை உயர்த்தக் கூடாது எனவும், வரைவறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வங்கி உயரதிகாரிகள் ஊதியத்திற்கும், அவர்கள் பெறும் ஊக்க ஊதியத்திற்கும் இடையே, அளவிற்கதிகமான வித்தியாசத்தை குறைக்க, புதிய விதிமுறைகள் வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)