கடன் தீர்வில் பின்வாங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; திவால் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு கடன் தீர்வில் பின்வாங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; திவால் சட்டத்தை ... ...  அப்படியா அப்படியா ...
மீண்டும் போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
10:46

மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றமான சூழல் நேற்று நிலவியதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று(பிப்.,27) பங்குச்சந்தைகள் மீண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 256.18 புள்ளிகள் உயர்ந்து 36,226.89ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 70.80 புள்ளிகள் உயர்ந்து 10,906.10ஆகவும் வர்த்தகமாகின. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 90 புள்ளிகளுக்கு அதிகமாகவும் வர்த்தகமாகின.

வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடப்பதாலும், அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அந்நிய முதலீடு அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் வர்த்தகமாவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் இன்று போர் பதற்ற சூழல் உருவானது. இதன்காரணமாக பங்குச்சந்தைகள் சரிந்தன. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 68 புள்ளிகள் சரிந்து 35,905-ஆகவும், நிப்டி 28 புள்ளிகள் சரிந்து 10,806-ஆகவும் முடிந்தன.

ரூபாயின் மதிப்பும் சரிவு
காலையில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.71.01-ஆக வர்த்தகமான நிலையில் மாலையில் 17 காசுகள் சரிந்து ரூ.71.23ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)