பதிவு செய்த நாள்
27 பிப்2019
23:25
பி.எஸ்.என்.எல்., ‘லேண்ட்லைன்’ போனை, திரும்ப ஒப்படைத்த வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய முன்வைப்பு தொகையை தர, நிதி கோரப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் லேண்ட்லைன் இணைப்பு பெற, முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். லேண்ட்லைன் இணைப்பு வேண்டாம் என, திரும்ப ஒப்படைக்கும் போது, ஆரம்பத்தில் செலுத்திய வைப்பு தொகையை, பி.எஸ்.என்.எல்., திருப்பி தர வேண்டும். ஆனால், இந்த தொகையை தர, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் போதிய நிதி இல்லை. போனை திரும்ப ஒப்படைத்து, பல மாதங்களாக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது, வாடிக்கையாளர்களுக்கு நிதி வழங்க, பல கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர், விஜயா கூறியதாவது:லேண்ட்லைன் போனை ஒப்படைத்தவர்கள் செலுத்திய வைப்பு தொகையை திருப்பி தர, தலைமை அலுவலகத்தில், 4 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல், நடப்பு பிப்., வரையில் நிதி கிடைக்கவில்லை. இந்த மாதங்களுக்கான நிதியை முழுமையாக தர கோரியுள்ளோம். நிதி பெறப்பட்ட உடன், போன் ஒப்படைத்தவர்களின் வைப்பு நிதி திரும்ப வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|