பதிவு செய்த நாள்
27 பிப்2019
23:27
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, தீவிர கண்காணிப்பு பட்டியலில் இருந்து, கார்ப்பரேஷன் பேங்க், அலகாபாத் பேங்க், தனலட்சுமி பேங்க் ஆகியவற்றை நீக்கியுள்ளது. இதனால், இவ்வங்கிகளுக்கு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்ந்ததை அடுத்து, அவற்றின் பங்குகள் விலை உயர்ந்தன.
நேற்று, மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே, கார்ப்பரேஷன் வங்கி பங்கு விலை, 10.10 சதவீதம்; அலகாபாத் வங்கி பங்கு விலை, 8.20 சதவீதம் உயர்ந்தன. தனலட்சுமி வங்கி பங்கு விலை, 10 சதவீதம் அதிகரித்தது.
மத்திய அரசு, கடந்த, 21ம் தேதி, பொதுத் துறையைச் சேர்ந்த, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட, 12 வங்கிகளுக்கு, 48 ஆயிரத்து, 239 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கப்படும் என, அறிவித்தது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம், தீவிர கண்காணிப்பு பட்டியலில் இருந்து, மூன்று வங்கிகளை நீக்கியுள்ளது.தனலட்சுமி வங்கியை பட்டியலில் இருந்து நீக்கினாலும், விதிமுறைகளை அவ்வங்கி பின்பற்றுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|