உருக்கு உற்பத்தி 2 சதவீதம் குறைந்தது உருக்கு உற்பத்தி 2 சதவீதம் குறைந்தது ... போர் பதற்றத்தால் பங்குச் சந்தை சரிவு போர் பதற்றத்தால் பங்குச் சந்தை சரிவு ...
சிறிய நிறுவனங்களுக்கு, ரூ.5 லட்சம் கோடி தேவை; வங்கிகளுக்கு கடன் வழங்கும் வாய்ப்பு காத்திருக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
23:31

மும்பை : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 5 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் வாய்ப்பு, வங்கிகளுக்கு காத்திருக்கிறது.

கடந்த, 2016, நவ.,8ல் அறிவிக்கப்பட்ட, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏராளமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. எண்ணற்றோர் வேலைவாய்ப்பை இழந்தனர்.இந்த பாதிப்பில் இருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மீட்க, மத்திய அரசு பல்வேறு ஊக்கச் சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமீபத்தில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின், 25 கோடி ரூபாய் வரையிலான இடர்பாட்டு கடன்களை, சிறப்பு திட்டத்தின் கீழ், மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.அந்த கணக்குகளுக்கு, வங்கிகள், 5 சதவீத நிதி ஒதுக்கவும், ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ மற்றும் ‘அஷ்வின் பரேக் அட்வைசரி சர்வீசஸ்’ நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு தேவைப்படும் நிதியில், வங்கிக் கடன் மூலம், 40 – 70 சதவீதம் தான் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.

தற்போது, இத்துறைக்கு, 5,500 கோடி டாலர், அதாவது, 3.90 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 7,000 கோடி டாலர், அதாவது, 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெறுவதற்கான தேவை, இத்துறைக்கு உள்ளது. இந்த வாய்ப்பை, வங்கித் துறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் சரக்கு மற்றும் சேவைகளுக்கான தொகையை, உரிய காலத்தில் பெற முடிவதில்லை. இதனால், இந்நிறுவனங்கள் தொடர்ச்சியாக செயல்படுவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றன. கடன் தவணையை முறையாக திரும்பச் செலுத்த முடிவதில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை விளங்குகிறது. ஏற்றுமதி, உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)