பதிவு செய்த நாள்
28 பிப்2019
11:33
மும்பை : பிப்ரவரி மாத வர்த்தகம் நிறைவடைந்ததை அடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்.,28) ஏற்றத்துடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 81.45 புள்ளிகள் உயர்ந்து 35,986.88 புள்ளிகளாகவும், நிப்டி 35.35 புள்ளிகள் உயர்ந்து 10,842 புள்ளிகளாகவும் இருந்தன. கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, பவர்கிரிட், ஆசியன் பெயிண்ட், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி வங்கி, வேதாந்தா உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.42 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன.
ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை ஹாங்காங் பங்குச்சந்தைகள் 0.06 சதவீதம் உயர்வுடனும், ஜப்பான் பங்குச்சந்தைகள் 0.35 சதவீதம் சரிவுடனும், ஷங்காய் பங்குச்சந்தைகள் 0.35 சதவீதம் சரிவுடனும் காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகள் 0.28 சதவீதம் சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|