பதிவு செய்த நாள்
01 மார்2019
07:16
ஜாம்ஷெட்பூர் : உலகளவில், உருக்கு துறையில், மிகச் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களில் ஒன்றாக, டாடா ஸ்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘எதிஸ்பியர் இன்ஸ்டிடியூட், உலகளவில் பல்வேறு வர்த்தகங்களில், சிறந்த ஒழுங்கு நெறிகளை கடைப்பிடிக்கும் நிறுவனங்களின் பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.இந்தாண்டு, உலோகம், கனிமம், சுரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய துறையில், சிறந்த நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக, டாடா ஸ்டீல் தேர்வாகியுள்ளது. இந்நிறுவனம், எட்டாவது முறையாக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டி.வி.நரேந்திரன் கூறியதாவது:‘டாடா’ என்றாலே, நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பை குறிக்கும். இது தான், டாடா குழுமத்துடன், இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த, லட்சக்கணக்கானோரை இணைக்கிறது.நிறுவனத்தின் நன்னடத்தை, செயல்பாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய கொள்கைகள் தான், இந்த அங்கீகாரம் கிடைக்க காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|