பதிவு செய்த நாள்
01 மார்2019
07:20
புதுடில்லி : வாடிக்கையாளர் சேவை, மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு, கடன் வளர்ச்சி உள்ளிட்ட ஆறு அம்சங்களில், சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொண்ட வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க், முதலிடத்தை பிடித்துள்ளது.
வங்கி சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான, ‘ஈஸ்’ பட்டியலில், பஞ்சாப் நேஷனல் பேங்க், 78.4 புள்ளிகள் பெற்று உள்ளது. அடுத்த இடங்களில், பேங்க் ஆப் பரோடா, எஸ்.பி.ஐ., ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா பேங்க், சிண்டிகேட் பேங்க் ஆகியவை உள்ளன.
இப்பட்டியலை, மத்தியஅமைச்சர், அருண்ஜெட்லி வெளியிட்டு பேசியதாவது: நிரவ் மோடி, மெகுல்சோக்சி ஆகியோரின், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியால் பாதிக்கப்பட்ட போதும், ஒன்பது மாதங்களில், பஞ்சாப் நேஷனல் பேங்க், வாராக் கடனுக்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில் லாபப் பாதைக்கு திரும்பியுள்ளது பாராட்டத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|