பதிவு செய்த நாள்
01 மார்2019
23:19
கோவை:தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி கடந்தாண்டை காட்டிலும், 10 சதவீதம் அதிகரித்து உள்ளது என, தொழில்நுட்ப துறையின் முதன்மைச் செயலர், சந்தோஷ் பாபு கூறினார்.
கோவையில் சந்தோஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி கடந்தாண்டில், 1 லட்சத்து, 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.வரும் ஆண்டில், 10 சதவீதம் வளர்ச்சி பெற்று, 1 லட்சத்து, 23 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் தகவல் தொழில்நுட்ப பணிகளை ஏற்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் தெரிந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பும், கம்ப்யூட்டர் தெரியாத பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவையிலிருந்து தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி, 4,589 கோடி ரூபாயாக உள்ளது. இது, இந்த ஆண்டு, 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, சந்தோஷ் பாபு கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|