புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 366தொழில் நிறுவனங்களில்  உற்பத்தி துவக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 366தொழில் நிறுவனங்களில் உற்பத்தி ... ...  தமிழக சி.ஐ.ஐ., தலைவராக எஸ்.சந்திரமோகன் தேர்வு தமிழக சி.ஐ.ஐ., தலைவராக எஸ்.சந்திரமோகன் தேர்வு ...
தயாரிப்பு துறை 14 மாதங்கள் காணாத வளர்ச்சிபுதிய ஆர்டர், விற்பனை, வேலைவாய்ப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
23:38

புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு, சிறப்பாக வளர்ச்சி கண்டு உள்ளது.

இது குறித்து, நிக்கி – மார்க்கிட் நிறுவனம்வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, இந்தாண்டு, ஜனவரியை விட, பிப்ரவரியில், அதிகரித்துள்ளது.அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘என்.ஐ.எம்., பி.எம்.ஐ.,’ குறியீடு, 54.3 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, ஜனவரியில், 52.1 புள்ளிகளாக இருந்தது.தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியின் உரைக்கல்லாக விளங்கும், இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், வளர்ச்சியை குறிக்கும்.

இதன்படி, மதிப்பீட்டு காலத்தில், 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு, தயாரிப்பு துறை, உற்பத்தியில் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறை, தொடர்ந்து, 19 மாதங்களாக ஏற்றத்தில் உள்ளது.

வர்த்தகம்

கடந்த, 2017 டிசம்பர் முதல், தயாரிப்பு துறையின் வர்த்தகம் சிறப்பாக அதிகரித்து வருகிறது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு, 28மாதங்களாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு, ‘ஆர்டர்’கள் கணிசமான அளவிற்கு கிடைத்து வருகின்றன.இதனால், தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் பெருகியுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், வேலைவாய்ப்புகள், ஆறரை ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. மூலப் பொருட்கள் மற்றும் விற்பனை விலையின் பணவீக்கம், மிதமான அளவிற்கே இருந்தது.

உயர்வு

நடப்பு மார்ச் மாதமும், தயாரிப்பு துறை வளர்ச்சி நன்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இத்துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு, ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். அதனால், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மறுமதிப்பீட்டில், 7 சதவீதத்தில் இருந்து, 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


400 நிறுவனங்கள்

தயாரிப்பு துறையில், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக், உணவு மற்றும் பானங்கள் உட்பட, எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களிடம், நிக்கி – மார்க்கிட் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)