15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம்15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம் ...  போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை போலி பில் தயாரிப்பு அரசு தீவிர நடவடிக்கை ...
வர்த்தகம் » ஜவுளி
'பின்னலாடை ஏற்றுமதி ரூ.25 ஆயிரம் கோடியை தொடும்'ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
23:53

திருப்பூர்:''நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்,'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் தெரிவித்தார்.

திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி, 'ஹைடெக் இன்டர்நேஷனல்' கண்காட்சி வளாகத்தில், 15வது நிட்டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சி நேற்று துவங்கியது. 'நிட்டெக்' தலைவர், ராயப்பன் வரவேற்றார். 'சைமா' சங்க தலைவர், ஈஸ்வரன், கண்காட்சியை திறந்து வைத்தார்.

ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் கூறியதாவது:திருப்பூர் ஆடை உற்பத்தி துறை வளர்ச்சிக்கு, இத்தகைய கண்காட்சிகள் பக்கபலமாக உள்ளன. பணம் மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றின் காரணமாக, நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிய துவங்கி விட்டது.திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியும் தொடர்ந்து சரிவை நோக்கியே பயணித்தது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டில், 26 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 2017 -- 18 நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது.நடப்பு நிதியாண்டிலும், துவக்கம் முதல் ஏற்றுமதி, சரிவை நோக்கியே சென்றது.கடந்த, அக்., முதல், திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பிரான்டட் நிறுவனங்கள், இந்திய சந்தையில், ஆடைகளை சந்தைப்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்த திருப்பூர் நிறுவனங்கள் பல, தற்போது ஏற்றுமதி ஆடை வர்த்தகத்திலும் கால்பதித்துள்ளன.

ஏற்றுமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் இரண்டும் ஒன்றாகி கொண்டிருக்கிறது. இந்த இரு வர்த்தகத்துக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)