அமெரிக்காவின் சலுகை பறிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்காது அமெரிக்காவின் சலுகை பறிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்காது ...  எழுச்சி காண துவங்கியது சேவைகள் துறைபுதிய ஆர்டர், வேலைவாய்ப்பு அதிகரிப்பு எழுச்சி காண துவங்கியது சேவைகள் துறைபுதிய ஆர்டர், வேலைவாய்ப்பு ... ...
வர்த்தகம் » ஜவுளி
கைத்தறி துறை வளர்ச்சிக்கு மூன்று திட்டங்கள்சந்தை தேவைக்கு ஏற்ப ஜவுளி வடிவமைக்க உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2019
23:37

புதுடில்லி:டில்லியில் உள்ள, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம், சந்தையின் தேவைக்கு ஏற்ப, நவீன பாணி கைத்தறி துணிகளை வடிவமைப்பது உள்ளிட்ட சேவைகளுக்காக, மூன்று திட்டங்களை உருவாக்கிஉள்ளது.


இம்மையத்தில், புதுப்பிக்கப்பட்ட கைத்தறி கண்காட்சி கூடத்தை, மத்திய ஜவுளி துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி திறந்து வைத்து, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:


காலத்திற்கேற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைக்கவும், தயாரிக்கவும், நுகர்வோர் விரும்பும் வண்ணங்கள் குறித்து ஆலோசனை வழங்கவும், 'விஷன்நெக்ஸ்ட்' திட்டம் உதவும்.இது, புதுமையான கைத்தறி ஆடைகள் தயாரிக்கவும், இத்துறையின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.அடுத்து, ஐ.டி.சி.ஆர்., திட்டத்தில், ஜவுளிகளின் மெய்நிகர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும். இதில், கலைநயமிக்க ஜவுளி வகைகள், ஜவுளி வடிவமைப்பு ஆவணங்கள், ஜவுளி ஆய்வு கட்டுரைகள் இடம் பெறும்.


மேலும், ஜவுளி மற்றும் அது சார்ந்த துறைகளின் ஆய்வு தகவல்களின் ஒருங்கிணைப்பு மையமாகவும் விளங்கும்.டி.ஐ.ஐ., திட்டத்தின் கீழ், ஜவுளி துறையில், இளம் தொழில் முனைவோர்கள், கைத்தறி நெசவாளர்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். இதர நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் புரிவதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.


இதில், தேசிய ஆடை வடிவமைப்பு மைய முன்னாள், இந்நாள் மாணவர்களும் பயன் பெறலாம்.தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்தின், மும்பை, டில்லி, பெங்களூரு கிளைகளில், 'ஸ்டார்ட் அப்' தொழில்களை உருவாக்குவதற்கான, முதல்நிலை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)