பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...  ‘இ – சேவை’ மையங்களை   குறைக்க அரசு திட்டமா? ‘இ – சேவை’ மையங்களை குறைக்க அரசு திட்டமா? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2019
23:13

ஈரோடு:ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் விளை பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், பாரம்பரிய சிறப்பான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.


இதன்படி, விருப்பாச்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, பவானி ஜமுக்காளம், திருநெல்வேலி அல்வா என, பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


ஈரோடு மஞ்சளின் தனித்தன்மை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி, தரம், நிறம் போன்றவை பிற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு இருப்பதில்லை. இதுபற்றிய குறிப்புடன், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி, 2011ல் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் உள்ள, இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பித்தனர்.தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். ஆட்சேபனை ஏதும் இல்லாததால், குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


‘ஈரோடு மஞ்சள்’ என்ற பெயரை, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.இது குறித்து, இந்திய புவிசார் குறியீடு பதிவக, இணை பதிவாளர், சின்னராஜா நாயுடு கூறியதாவது:இந்தியாவில், மஹாராஷ்டிராவில் வைகான் ரக மஞ்சள், ஒடிசாவில் கந்தமால் மலை மஞ்சள் போன்றவைகளுக்கு, ஏற்கனவே புவிசார் குறியீடு உள்ளது.


இதன்படி, ஈரோடு மஞ்சளுக்கும் கடந்த வாரம், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண்ணின் தரம், முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.ஈரோடு, கோவை, காங்கேயம், அன்னுார், தொண்டாமுத்துார் பகுதி விவசாயிகள் மட்டுமே, ஈரோடு மஞ்சள் என்ற பெயரை பயன்படுத்த முடியும்.இந்த மஞ்சளை, பிற பகுதியினர் வாங்கி சென்று விளைவித்தாலும், அது ஈரோடு மஞ்சளாக கருத முடியாது.


காரணம் மண்ணை அடிப்படையாக கொண்டு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் பெருமை பெறுகிறது. கூடுதல் விலை, தேவை அதிகரிப்புக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)