பதிவு செய்த நாள்
07 மார்2019
23:49
புதுடில்லி:‘ஆதார்’ சேவையை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், ஒவ்வொரு வாடிக்கையாளரின் விபரத்தை பெற, 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல நிறுவனங்கள், கே.ஒய்.சி., எனப்படும், ‘வாடிக்கையாளரை அறிந்து கொள்வோம்’ நடைமுறைப்படி, ஆவணங்களை பயன்படுத்துவதில், 150 – -200 ரூபாய் வரை செலவிடுகின்றன.இந்நிறுவனங்கள், ஆதார் அடிப்படையில், வாடிக்கையாளர் விபரங்களை சரிபார்க்கும் வசதியை பயன்படுத்தினால், செலவை குறைக்கலாம்.
இந்த வகையில், ஆதார் சேவையை பயன்படுத்தி, வாடிக்கையாளர் விபரத்தை சரிபார்க்கும் வணிக நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், வரிகள் உட்பட, தலா, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சரிபார்ப்பிற்கான அத்தாட்சி சான்றுக்கு, வரிகள் உட்பட, 50 காசுகள் வசூலிக்கப்படும் என, ஆணையம் தெரிவித்துள்ளது.பொதுத் துறை நிறுவனங்கள், அஞ்சல் துறை ஆகியவற்றுக்கு, பரிவர்த்தனை கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|