பதிவு செய்த நாள்
07 மார்2019
23:50
சென்னை:நகர்ப்புறத்தில் உள்ள சவால்களுக்கு, அறிவியல் மற்றும் தொழிநுட்ப ரீதியில் தீர்வு காணும் போட்டியை, 'நகர்ப்புற வாழ்வுக்கான தேடல்' என்ற தலைப்பில், டாடா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதில், வெற்றி பெறுவோருக்கு, 1 கோடி ரூபாய் வரை முதலீட்டு உதவி வழங்கப்பட உள்ளது. இது குறித்து, சோஷியல் ஆல்பா மற்றும் டாடா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நகரங்களில் உள்ள சவால்களுக்கு, அறிவியல்மற்றும் தொழில்நுட்ப தீர்வு காண, கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக, 'நகர்ப்புற வாழ்வுக்கான தேடல்' என்ற தலைப்பில் போட்டியை அறிவித்துள்ளோம்.இந்த தேடலின் இலக்கு, புதுமையான தொழில்நுட்பம் வழியாக, பிரச்னைக்கான தீர்வை அளிக்கும், புதுமையான நிறுவனத்தை அடையாளம்காண்பதே.
குப்பை, நீர், சுகாதாரம்,சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர்வு, நிலையான வாழ்விடம் மற்றும் நகராட்சி அமைப்புகள் ஆகிய தலைப்புகளில், பிரச்னை களுக்கான தீர்வுகளை அனுப்பலாம்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 1 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டு உதவி வழங்கப்படும்.இதில் பங்கேற்க விரும்புவோர், ஏப்., 21ம் தேதிக்குள், www.socialalphachallenge.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|