பதிவு செய்த நாள்
08 மார்2019
00:02
புதுடில்லி:வாகன மாசு தொடர்பான வழக்கில், ‘போக்ஸ்வேகன்’ நிறுவனத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த, போக்ஸ்வேகன் நிறுவனம், உலகளவில், 1.10 கோடி டீசல் கார்களில், சாப்ட்வேர் மூலம், காற்று மாசு அளவை குறைத்து காட்டியது, சில ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்தது.இதையடுத்து இந்நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்த, 3.24 லட்சம் கார்களை திரும்பப் பெற்று, சாப்ட்வேரை சரி செய்து தந்தது.
எனினும், இதன் டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்ந்த, உயர்மட்டக் குழு, போக்ஸ்வேகன் நிறுவனத்திடம், 171 கோடி ரூபாய் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என, பரிந்துரைத்தது.இது தொடர்பான வழக்கில், போக்ஸ்வேகன் நிறுவனம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக, 500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, டில்லி, தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது, உயர்மட்டக் குழு பரிந்துரைத்ததை விட, அதிகம்.இத்தொகையை, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தின் மாசுபாட்டை கட்டுப்படுத்த, பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|