பதிவு செய்த நாள்
08 மார்2019
00:05
கோல்கட்டா:நாட்டின் தேயிலை ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில் சற்று சரிந்துள்ளது.இது குறித்து, இந்தியதேயிலை வாரியம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் தேயிலை ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில், 2.23 கோடி கிலோவாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இதுவே, 2.39 கோடி கிலோவாக இருந்தது.இருப்பினும், ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு, கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரியில், 480.77 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு, 470.83 கோடி ரூபாய்.இதற்கு காரணம், 2018ல், தேயிலையின் விலை, 1 கிலோவுக்கு, 197.42 ரூபாயாக இருந்தது, நடப்பாண்டு ஜனவரியில், 215.88 ரூபாயாக அதிகரித்துவிட்டது.ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. 31.9 லட்சம் கிலோவாக இருந்தது, 15.1 லட்சம் கிலோவாக குறைந்துவிட்டது.இருப்பினும், ஈரானுக்கான ஏற்றுமதி, 28.2 லட்சம் கிலோவாக இருந்தது, 59 லட்சமாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|